காதல் என் எழுத்தில்
காதல் - நூலிலும் நடக்க கற்று கொடுக்கும்.
பிறவிகளில் நம்பிக்கை இல்லை உன்னை காணும் முன் வரை
நிராயுத பாணியாய் நான், நீ மட்டும் விழி எனும் வில்லோடும் பார்வை எனும் அம்போடும் தாக்கினாய் என்னை - நொறுங்கியது என் இதயம்
உன் நினைவோடு உயிர் ஊசல் ஆடுவதை விட உன் நிழலோடு ஓர் நாள் ஈசலாய் சாவதே மேல்
சுமை இல்லா வாழ்க்கை பயணத்தில் கனத்தது இதயம் - உன் நினைவுகளால் !!!
உன் கால் கொலுசு - என் நல்ல நேரத்தை எனக்குணர்த்தும் கடிகார மணி
மனதை தொலைத்த பின்பும் கனமாய் இருப்பதாய் உணர்ந்தேன் - உள்ளே நீ
காதல் - இழந்த பின்பும் (இதயத்தை) நான் வெற்றி அடையும் ஓர் வினையான விளையாட்டு
என் மனதை திருட மட்டுமே உரிமை உண்டு உனக்கு - உன்னுடைய மனதை என்னிடம் இருந்து பறிக்க உரிமை இல்லை
உன் ஸ்பரிசம் - மழையின் முதல் துளி, மண்ணை முத்தம்மிட்டு மண் வாசனை வருவதை போல மிக ரம்மியமான ஓர் உணர்வு
பிரிவே இத்தனை சுகமாய் இருப்பின் நாம் ஏன் ஒன்று சேர கூடாது ???
தலை பிரசவம் - யார் சொன்னது ஆண்கள் பிரசவ வலியை உணர வில்லை என்று ? காதலியிடம் காதலை சொல்லும் வலி ஆணின் தலை பிரசவம்
சுயநலவாதி - சுயநலவாதி என்பர் என்னை, விளங்கவில்லை எனக்கு பல நாள் - உன்னை மட்டுமே நினைத்து கொண்டு இருப்பதால் என புரிந்தது பின்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment